Recent Comments

படையினருக்குப் புதுவருட விடுமுறை முல்லைத்தீவு குமுழமுனையில் மீள்குடியேற்றம் ஒத்திவைப்பு


இராணுவத்தினர் புதுவருட விடுமுறையில் வீடு சென்றுள்ளமைதால் முல்லைத்தீவு குமுழ முனை மத்திய பிரதேசத்தின் மீள்குடியேற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் பத்திநாதன் நேற்றுத் தெரிவித்தார்.


இன்றைய தினம் முல்லைத் தீவு குமுழமுனை மத்திய பிரதேசத்தில் சுமார் 105 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் மீள் குடியேற்றப்படவிருந்தனர். எதிர்வரும் 20ஆம் திகதிக்கு இந்த மீள் குடியேற்றம் ஒத்திவைக்கப்பட்டது.இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:

கடமையில் இருந்த இராணு வத்தினர் புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக விடுமுறையில் வீடு சென்றுள்ளனர். மக்களை முகாம்களில் இருந்து ஏற்றி வருவதற்கு இராணுவத்தினரின் உதவி  தேவை. இந்தக் காரணத்தாலேயே மீள்குடியேற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

About vadduvakal

0 comments:

Post a Comment

Popular Posts











சாரங்கா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி